உள்ளே நுழைந்ததும் துவதஸ்தம்பம். கீழே பிள்ளையார். நந்தி. கடந்து சென்றால் அருள்மிகு மேகநாத சுவாமிகள்.
திங்கள் தங்கிய சடை உடையானை..
தேவ தேவனை, செழுங்கடல் வளரும்.
சங்க வெண்குழைக் காது உடையானை....
சிவ பெருமானை தரிசிக்கலாம்.
சுவாமி மீது சித்திரை மாதத்தில் 7 நாட்கள் சூரியனின் கதிர்கள் படும்.
சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தால் ஷேத்ர புராணேஷ்வர் சிற்பம். அம்பாளை இடம் இருந்து பார்த்தால் சிரித்த படியும், வலமிருந்து பார்த்தால் கோபமாகவும் தெரியும். கோபம் அடைந்த அம்பாளை ஈசன் சமாதானப் படுத்துவதை பார்க்கலாம். அற்புத சிற்பம். வாழ்க்கை தத்துவம் கூட.
நவக்கிரக சன்னதி கிடையாது. 9 நாகர் சிலைகளே நவக்கிரகங்கள்.
தென்மேற்கு மூலையில் இருந்து பார்த்தால் பிரம்மா விஷ்ணு, சிவன் மூன்று தெய்வங்களை ஒன்றாக தரிசனம் செய்யலாம்.
முடிந்து தெற்கு பிரகாரம் வழியே வந்தால் ஆஹா..
மற்றொரு சிவன் சன்னதி.
சகல புவனேஸ்வரர். அம்பாள் மின்னும் மேகலையாள். கோவினுள் மற்றொரு கோவில். இளங்கோவில் என்பர்.
அருகிலே துர்க்கை கையில் கிளியுடன். பக்தர்கள் தங்களின் கோரிக்கையை கூற கிளி தூது செல்வதாக நம்பிக்கை. கிளிகள் நிரம்ப இருக்கின்றன. அவைகள் பறந்து செல்வதை பார்க்கும் போது பக்தர்கள் தங்களின் வேண்டுதல் சுவாமியிடம் செல்வதாக மகிழ்ச்சியடைகின்றனர்.
பார்வதி பரமேஸ்வரனை கஜ வாகன ரூபராய் வைத்து பூஜித்ததால் கஜ பிருஷ்ட விமானம்.
பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் தெற்கு நோக்கி தனி சன்னதியில் கொள்ளை அழகோடு வீற்றிருக்கிறாள் அன்னை லலிதாம்பிகை. கம்பீரமான தோற்றத்துடன் அபய ஹஸ்தம். வலது காலை இடது பக்கத்தில் மடித்து கம்பீரமாக அமர்ந்து இருப்பார். பஞ்சாசன பீடத்தில் ஸ்ரீ மேருவின் மேல் அமர்ந்து ஸ்ரீ மணோன்மனி ரூபமாக.
அம்பாளின் முகத்திலிருந்து தோன்றிய வாக்தேவதைகள் மூலம் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் உலகில் தோன்றிய ஸ்தலம். ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்ட இடம்.
சர்வ அலங்கார பூஷிதையாக வளையல்கள், கொலுசு, ஒட்டியாணம், ஆபரணங்களும் அணிந்து காட்சி அளிக்கிறார்.
விஜய தசமியன்று திருப்பாவாடை மஹா நைவேத்தியம் . சர்க்கரை பொங்கல் நடுவில் நெய் குளத்தில் அம்பிகையை தரிசிக்கலாம்.
மதியம் 12 மணிக்கு பிரண்டை சாதம் பிரசாதம்.
நோய்கள் தீரும் என்று நம்பிக்கை.
சென்று வழிபடலாமா..
No comments:
Post a Comment