மயிலாடுதுறையில் இருந்து திருமீயச்சூர் கோவிலுக்கு ஞாயிறு தோறும் செல்லும் வாய்ப்பு எனக்கு முன்னர் கிடைத்தது.
மயிலாடுதுறையிலிருந்து
4 கி.மீ கடந்ததும் வலது பக்கம் ஒரு போர்டு கண்ணில் தென்படும். ஒரு கோவில் பற்றிய தகவல்.
நட்டுவாங்கனார் வழுவூர் ராமையா பிள்ளை அவர்களின் ஊர்.
சிறிய கிராமம். அழகான கோவில். அது தான் அட்ட வீரட்டேஸ்வரர். அட்டம் என்றால் எட்டு. சிவ பெருமானின் வீரமான எட்டு கோவில்களில் வழுவூர் வீரட்டேஸ்வரரும் ஒருவர்.
வழுவூர் கோவிலுள் நுழையும் முன் குளம் உள்ளது. அது பஞ்ச பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படும்.
கடந்து சென்றால் இரண்டாவது கோபுரம். அதில் சுயம்பு மூர்த்தியாக நாகாபரண அலங்காரத்தில் கீர்த்தி வாசனாய் சிவ பெருமான்.
செருக்கு மிகுந்த தருகாவனத்து முனிவர்கள் வேள்வியில் ஈடுபட்டனர். அதிலிருந்து தோன்றிய யானையை இறைவன் மேல் ஏவி விட சிவ பெருமான் யானையின் வயிற்றில் புகுந்தார்.
உலகமே இருள் சூழ்ந்தது. உமையவள் அச்சத்துடன் குழந்தை முருகனை இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்கும் போது பெருமான் யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வருவார். முருகப்பெருமான் தன் தந்தையை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டுவார். யானையை சம்ஹாரம் செய்ததால் அவர் கஜ
சம்ஹார மூர்த்தி.
சுவாமியின் உள்ளங் கால்களை காணலாம். இவை அனைத்தும் சிற்பங்களாக மண்டபத்தில் காணலாம்.
சுவாமிகளின் திருவடியை யானையின் தலையில் வைத்து உள்ளதையும் பார்க்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் யந்திர பிரதிக்ஷ உள்ளது.
அம்பாள் இளங்கிளை நாயகி.
அமாவாசை தினம் சிறப்பு வாய்ந்தது.
மற்றைய வீரட்டேஸ்வர தலங்கள்
திருக்கண்டீயூர், திருக்கோவிலூர், திருவேதிகை
திருப்பறியலூர்,
திருவிற்குடி
திருக்கொற்கை
திருக்கடையூர்.
திருக்கோவிலூர் மற்றும் திருவேதிகை இரண்டும் விழுப்புரம் அருகில் உள்ளது.
மற்றைய ஆறு தலங்கள் மயிலாடுதுறை அருகில் உள்ளது.
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால்விடை மேல் திகழ்வானை........
காண அட்ட வீரட்டேஸ்வரர் தலங்கள் செல்வோமா.......

No comments:
Post a Comment