காலை 7 மணிக்கு திருச்சியிலிருந்து கிளம்பி சென்றோம்.. 100 கி.மீ தொலைவு.
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னை பிறப்பறுக்கும் பேராளன் - தென்ன பெருந்துறையின் .......
திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்..
மாணிக்கவாசகர் கட்டிய கோவில். அதிமர்த்தன பாண்டிய மன்னரின் அமைச்சர். குதிரை வாங்க வந்து அந்த பணத்தில் ஈசனுக்கு கோவில் கட்டினார். பின்னர் இறைவன் நரியை பரியாக்கி பரியை நரியாக்கி, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு திருவிளையாடல் புரிந்தார்.
கோவில் சிறப்பு சிற்பக் கலை தான்.
உருவம் இல்லாமல் அருவ வழிபாடு.
சன்னிதானத்தில் ஓரு கல் இருக்கும். அதில் புழுங்கல் அரிசி சாதத்தை நைவேத்தியம் செய்வார்கள். ஆவி பறக்க. கீரை, பாகற்காய் கூட. தேன்குழல் அதிரசம் ஆகியவையும் உண்டு. 11 மணிக்கு. அது முடிந்ததும் விற்பனை செய்கிறார்கள். குறைந்த விலை. நிறைந்த சுவை.
ஆர்க்கிடெக்சர் அதிசயம்.
குரங்கு உடும்பு வழிபாடு
கொடுங்கை
1000 கால்கள் இரண்டு தூண்களில்
ஆறு யானைகளை தூக்கிச் செல்லும் பறவைகள்.
கற்சங்கிலிகள்
பல நாட்டு குதிரை
பச்சிலை ஓவியங்கள்
நடன முத்திரைகள்.
இன்னும் பல....
அம்பாள் திருவடி மட்டும் தான்..
கற்பூர ஆரத்தி வெளியே காட்ட மாட்டார்கள்.
குருந்த மரம் தல விருட்சம்.
மாணிக்கவாசகர் சிலை உள்ளே இருக்கின்றது. அவருக்கு சிறப்பு வழிபாடு. அவருக்கே முதல் மரியாதை.
நவக்கிரகங்கள் தூண்களில் இருக்கும்.
27 நட்சத்திரங்கள் உருவங்களாக இருக்கும்.
என்னிலா சிற்பங்கள்.
கோவில் சிறப்பு கூற வழிகாட்டிகள் இருக்கின்றனர்..
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி. அங்கிருந்து 10 -15 கி.மீ.
பார்க்க வேண்டிய
அதிசயக் கோவில்
ஆவுடையார் கோவில்....

No comments:
Post a Comment